Thursday, October 21, 2010

நானே முடிந்தாலும்

என் தேடல்கள் முடிவதில்லை
நானே முடிந்தாலும்

சில தேடல்கள் முடிவதில்லை
தேடுவது கிடைத்தாலும்
சில கேள்விகள் நிறைவதில்லை
பதில்கள் தெரிந்தாலும்
சில நாட்கள் முடிவதில்லை
சூரியன் மறைந்தாலும்
சில நினைவுகள் அழிவதில்லை
இதயமே அழிந்தாலும்

உயிருக்குள் உறைந்தவைகள்
உலகமே அழிந்தாலும்
ஒரு நாள் மீண்டு வரும்
வரும் நாளை நோக்கிய இப்பயணம்
வாழ்நாளும் தாண்டி வாழும்

என் தேடல்கள் முடிவதில்லை
நானே முடிந்தாலும்

No comments: