Wednesday, October 20, 2010

நீ அவர்களோடு இரு...

1. யாரும் இறந்தகாலத்திற்குத் திரும்பச் சென்று புத்தம் புதியதாய் எதையும் ஆரம்பிக்க முடியாதுதான். ஆயினும், யாரும் இப்போதே இங்கேயே ஆரம்பித்துப் புத்தம் புதியதோர் முடிவை அடையலாம் - கார்ல் பார்ட்

2. சின்னஞ்சிறு காரியங்களிலும் உன் முழு மனதைச் செலுத்திச் செய். இதுதான் வெற்றியின் ரகசியம் - சுவாமி சிவஹானந்தா

3. நல்ல ஆரம்பமே பாதி வெற்றி - அரிஸ்டாட்டில்

4. இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது - நெப்போலியன்

5. சுயக் கட்டுப்பாட்டாலும், சுய ஒழுக்கத்தாலும் நம் குணநலனைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளலாம் - கிளென்வில் க்ளெய்ஸர்

6. நீ திட்டமிடத் தொடங்கிவிட்டால், அது பெரிய திட்டமாக இருக்கட்டும் - டொனால்ட் ட்ரம்ப்

7. கடவுளே! முயற்சி எனும் விலை கொடுத்தால், நீ எதை வேண்டுமானாலும் தந்துவிடுகிறாயே! - லியனார்டோ டா வின்சி

8. யார் உன்னை மேலும் சிறந்தவர்களாக்குகிறார்களோ, நீ அவர்களோடு இரு - ஓர் ஆங்கிலப் பழமொழி

9. நான் பிரார்த்திப்பது வெற்றி வேண்டும் என்றல்ல. திட நம்பிக்கை வேண்டும் என்றுதான் - அன்னை தெரசா

No comments: