Sunday, April 3, 2011

மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?


ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.

ஏம்மா அஞ்சு! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?
நீங்கதானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லிக்கிட்டேயிருந்தீங்க...

ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சிருப்பாங்க,
அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் forward தான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால்,
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்,
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

நீ பஸ்ல ஏறினாலூம் பஸ் உன்மேல ஏறினாலும் டிக்கெட் நீ தான் எடுக்கணும்.
என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டை தான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

என்ன தான் பெரிய வீரனாக இருந்தாலும்,
வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீலை முந்த முடியாது. இதுதான் உலகம்

ஓடுற எலி வாலைப் புடிச்சால் நீ 'கிங்'கு
ஆனால்,தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

வேர்க் கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

ஓட்டப் பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்,
கைக்குத் தான் ப்ரைஸ் கிடைக்கும்.


என்னதான் நெருப்புக் கோழியாக இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.

No comments: