பள்ளியின் பழைய கட்டிடத்தின் நடுவில் இருந்த அந்த நீண்ட வழித்தடம், ஒவ்வொரு காலைவும் ஒரு தனி உயிர் பெற்றது போல இருக்கும். அங்கேயே தினமும் முதலில் நடந்து செல்வார் சமூக அறிவியல் ஆசிரியர் அருண் சார். மாணவர்கள் எல்லாரும் அவரை அன்பாக “அருண் அண்ணா” என்று அழைப்பார்கள்.
அவரது கற்றல் முறை சாதாரணமில்லை. பாட புத்தகத்தை மட்டும் படிக்க சொல்லாமல், வாழ்க்கையைப் பற்றி பேசுவார். கவிதைகளை உணரச்செய்வார். பல மாணவர்களின் கனவுகளுக்கு அவர் ஒரு தீப்பொறி.
ஆனால் அந்த பள்ளியில் எல்லாரும் அவரைப் போல நினைக்கவில்லை.
புதிய நிர்வாகம் வந்த பிறகு, மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்ற ஒரு அழுத்தம் உருவானது. “பாடத்துக்கு வெளியே பேசாதீங்க”, “சிலபஸ் முடிச்சா போதும்” என்று மேலதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார்கள். அருண் சார் அதற்கு உடன்படவில்லை.
“மாணவர்கள் marks மட்டும் வாங்குற மெஷின் இல்ல. அவர்களுக்கு கனவுகள் இருக்கு,” என்று அவர் ஒருமுறை கூட்டத்தில் சொல்லியிருந்தார்.
அந்த ஒரு வார்த்தை அவருக்கு பிரச்சனைகளின் தொடக்கம் ஆனது.
மெல்லமெல்ல அவருக்கு unnecessary complaints வந்தது. classes observe பண்ணுறதுனு பெயர்ல அவரை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் விசாரணை செய்யப்பட்ட மாதிரி இருந்தது.
நான்கு மாத நூலக காத்திருப்புக்கு பின்பு
ஒரு நாள், Head Master அவரை அலுவலகத்திற்கு அழைத்தார்.
“நீங்க நல்ல ஆசிரியர் தான். ஆனா நம்ம system-க்கு adjust ஆகணும். இல்லனா…” என்று அர்த்தமுள்ள மௌனம்.
அருண் சார் சிரித்தார். அந்த சிரிப்பில் சோர்வும் இருந்தது, ஆனால் அடங்காத மனமும் இருந்தது.
அடுத்த வாரம், பள்ளியில் ஒரு செய்தி பரவியது—அருண் சார் மாறுதல் கேட்டிருக்கிறார்.
மாணவர்கள் அதைக் கேட்டு நம்பவில்லை. “சார், நீங்க போக மாட்டீங்க இல்லையா?” என்று கேட்டார்கள்.
அவர் நேராக பதில் சொல்லவில்லை. “நீங்க நல்லா படிங்க… அதுவே எனக்கு சந்தோஷம்,” என்றார்.
மாறுதல் நாளில், அந்த வழித்தடம் வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. மாணவர்கள் எல்லாம் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் அழுதார்கள்.
ஒரு சிறிய மாணவன் வந்து கேட்டான், “சார், நீங்க போய்ட்டு நம்மை மறந்துடுவீங்களா?”
அருண் சார் மெதுவாக அவன் தோளில் கை வைத்தார்.
“நான் உங்களை மறக்க மாட்டேன்… நீங்க உங்க கனவுகளை மறக்காதீங்க,” என்றார்.
அவர் நடந்து சென்றார். அந்த வழித்தடம் அவரின் அடிகளின் ஒலியை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டது போல.
அவரை அழுத்தம் கொடுத்து அனுப்பிய அந்த பள்ளி, இன்னொரு ஆசிரியரைப் பெற்றது. ஆனால் மாணவர்களின் மனதில் இருந்த அந்த “அருண் அண்ணா” என்ற இடம் மட்டும் யாராலும் நிரப்ப முடியவில்லை.
சில மனிதர்கள் ஒரு இடத்தை விட்டு சென்றாலும், அவர்கள் விதைத்த கனவுகள் அங்கேயே வளர்ந்து கொண்டே இருக்கும்.
