Saturday, August 29, 2026

என் காதல் கதைகள் –02

பள்ளியில் படித்த காலம்…

அந்த வயதில் யார் மீதும் எனக்கு எந்தவிதமான விருப்பமும் ஏற்பட்டதில்லை. காதல் என்றால் என்ன, ஒருவரை பார்த்து ஏன் மனசு மாறுகிறது என்றெல்லாம் பெரிதாக யோசித்ததுமில்லை.

ஆனால், ஒரு நாள் எல்லாமே மாறியது.

நானும் அவளும் ஒரே வகுப்பில் படித்தோம்.

அந்த வகுப்பு எனக்கு புதுசு. அந்த இடமும் புதுசு. அப்போது எனக்கு ஒரு புதிய நண்பன் கிடைத்தான். அன்றைய காலத்தில் நண்பர்களுக்குள் “மாப்ள”, “மச்சான்” என்று கூப்பிட்டு பேச ஆரம்பித்திருந்த வயசு.

ஒருநாள் திடீரென்று,

“டேய்… உன்னையே பார்த்துட்டு இருக்கா பாரு… பாரு… உன்னைப் பார்த்து சிரிக்கிறா!” என்றான்.

நான் உடனே அவளைப் பார்க்காமல், “எங்கே?” என்று கேட்ட மாதிரி நடிப்பேன்.

பிறகு யாருக்கும் தெரியாமல் மெதுவாக அவளைப் பார்ப்பேன்.

அவள் உண்மையிலேயே என்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

எங்கள் கண்கள் சந்திக்கும் அந்தச் சில நொடிகளில், என்ன செய்வது என்று தெரியாமல் நான் மெதுவாகச் சிரிப்பேன்.

அவளும் பதிலுக்கு மெதுவாகச் சிரிப்பாள்.

அந்தச் சின்னச் சிரிப்பு போதும்… அந்த வயதில் என் மனசுக்குள் ஏதோ ஒன்று புதிதாகத் தொடங்கிவிட்டது.

நாள்கள் செல்லச் செல்ல, எங்கள் பார்வைகள் அதிகமானது.

நாங்கள் ஒருவரிடம் ஒருவர் அதிகமாகப் பேசவில்லை.

ஆனால், பேசாமலேயே நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.

வகுப்பில் நான் அவளைப் பார்ப்பேன்.

அவள் என்னைப் பார்ப்பாள்.

நான் சிரிப்பேன்.

அவளும் சிரிப்பாள்.

அவ்வளவுதான்.

ஆனால் அந்த வயதில் அந்த “அவ்வளவுதான்” என்பதே ஒரு பெரிய காதல் கதையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் எங்கள் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் இது தெரிய ஆரம்பித்துவிட்டது.

அவள் பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிட ஆரம்பித்தார்கள்.

“டேய்… உன் ஆளு வர்றா!”

“அவளைப் பாரு!”

“இவனுக்கு அவதான்!”

என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.

நான் வெளியில் கோபப்பட்ட மாதிரி காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு விதமான சந்தோஷம் இருக்கும்.

அவளையும் அப்படித்தான் கிண்டல் செய்தார்களா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கும்.

அவளும் வெட்கப்பட்டு சிரிப்பாள்.

அந்தக் காலத்தில் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு கிண்டல்—இதுவே எங்களுக்கு பெரிய விஷயம்.

ஆனால், எங்கள் காதல் கதையில் ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் வந்தது.

வகுப்பறைக்கு வெளியே வைத்து ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் "அப்போது நான் அவளை பார்க்க அவள் என்னை பார் பார்க்க ஒரே ரொமான்ஸ்"அப்போது டீச்சர் எங்களைப் பார்த்துவிட்டார்.

“நீங்க ரெண்டு பேரும் இங்கே வாங்க!”

என்று அழைத்தார்.

அந்த நொடியில் என் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

நண்பர்கள் எல்லோரும் எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

நாங்கள் இருவரும் தலை குனிந்துகொண்டு டீச்சர் முன்னால் போய் நின்றோம்.

டீச்சர் என்ன சொன்னார், என்ன தண்டனை கொடுத்தார் என்பதெல்லாம் இப்போது முழுமையாக நினைவில் இல்லை.

ஆனால், அந்த நேரத்தில் அவளுடன் சேர்ந்து டீச்சர் முன்னால் நின்ற அந்த நொடி மட்டும் இன்னும் மறக்க முடியவில்லை.

அன்று வீட்டுக்குச் செல்லும்போது கூட என் மனதில் ஓடியது ஒரே விஷயம்தான்—

“அவளும் என்னைப் பிடித்துதானே பார்த்தாள்… சிரித்தாளே…”

அது உண்மையிலேயே காதலா?

அல்லது பள்ளிப் பருவத்தில் தோன்றிய ஒரு அழகான கிரஷ்ஷா?

அப்போது அதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை…

யார் மீதும் ஏற்படாத அந்த உணர்வு, அந்த வயதில் அவள் மீது மட்டும் எனக்கு ஏற்பட்டது.

அந்தப் பள்ளி வகுப்பறை, நண்பர்களின் கிண்டல், அவளுடைய மெதுவான சிரிப்பு, எங்கள் கண்கள் சந்தித்த அந்த நொடிகள்…

இவை எல்லாம் சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் காதல் நினைவாக மாறிவிட்டன.

அதுதான் என் காதல் கதையின் அடுத்த பக்கம்…

வளரும்...

என் காதல் கதைகள்...

அவளுக்காக கடையம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.

அன்று அவள் பேருந்திலிருந்து இறங்கி, கையில் ஒரு பேக்குடன் நடந்து வந்தாள். நான் என் பைக்கில் அங்கே வந்திருந்தேன். அவளைப் பார்த்த அந்த நொடியில் என் மனதுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.

ஒருபக்கம் சந்தோஷம்… இன்னொரு பக்கம் பயம்… அதைவிட அதிகமாக பதட்டம்.

யாராவது பார்க்கிறார்களா என்று சுத்தி பார்க்க சீக்கிரம் கிளம்புவோமா யாராவது தெரிஞ்சவங்க பாத்துருவாங்க என்றாள் மென்மையாக 

“எங்கே அழைத்துச் செல்வது?” என்று எனக்கே தெரியவில்லை.

அந்த நேரத்தில் கடையத்தில் எனக்குத் தெரிந்த இடம் என்றால், எங்கள் வயல் மட்டும்தான். அந்த வயலில் ஒரு பெரிய பாறை இருந்தது. அந்தப் பாறைதான் அப்போது எனக்கு உலகத்திலேயே பாதுகாப்பான இடமாகத் தோன்றியது.

அதனால் அவளை என் பைக்கில் அழைத்துக்கொண்டு எங்கள் வயலை நோக்கிப் புறப்பட்டேன். பாதை குண்டும் குழியுமாகதான் இருந்தது.

காலை நேரமாக இருந்தாலும் வெயில் பயங்கரமாக இருந்தது. சூரியன் தன் வெப்பத்தை முழுவதுமாக எங்கள்மீது கொட்டிக்கொண்டிருந்தான்.

நான் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் என் மனம் மட்டும் வேறு எங்கோ ஓடிக்கொண்டிருந்தது.

அவள் என்ன நினைப்பாள்?

நான் அழைத்துச் செல்லும் இடம் அவளுக்குப் பிடிக்குமா?

என்னிடம் பேசுவாளா?

இப்படி ஆயிரம் கேள்விகள் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

கடைசியில் எங்கள் வயலை அடைந்தோம்.

அங்கே இருந்த அந்தப் பாறையின் அருகில் அவளை அழைத்துச் சென்றேன். வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அந்த வெயிலைக்கூட நான் கவனிக்கவில்லை.

ஏனென்றால், என் அருகில் அவள் இருந்தாள்.

அந்த நாள் நடந்தது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையில் அது மறக்க முடியாத ஒரு நாளாகிவிட்டது.

கடையம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய அந்த சந்திப்பு, என் வாழ்க்கையின் அழகான காதல் கதையாக மாறும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

இன்றும் அந்தப் பாறையை நினைத்தாலே, அந்த முதல் சந்திப்பும், அந்த பதட்டமும், அந்த பயமும், அவளை முதன்முதலில் பார்த்த அந்த நொடியும் என் கண்முன்னே வந்து நிற்கிறது.

அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஏனென்றால், அது அவளை நான் முதன்முதலில் பார்த்த நாள் மட்டுமல்ல…
என் காதல் கதையின் முதல் பக்கமும் அதுதான்.

வளரும்...

Monday, May 4, 2026

நடக்கச் சொல்லித் தரவா...

என் உயிரே,

இந்த கடிதத்தை எழுத ஆரம்பிக்கும் முன், பல முறை என் மனசு உன்னிடம் ஓடிப் போய்ட்டு திரும்பி வந்தது. சொல்லவேண்டிய வார்த்தைகள் நிறைய இருக்கிறது, ஆனா அவற்றை எப்படிப் போடுவது என்று தெரியாமல் என் விரல்கள் தடுக்கின்றன. உன்னிடம் பேசும்போது எல்லாமே எளிதாகிவிடும், ஆனால் இங்கே காகிதம் முன்னால் இருக்கும் போது என் இதயம் தான் பேசுகிறது.

நீ என் வாழ்க்கையில் வந்த நாளிலிருந்து, நான் என்னவென்று எனக்கே புரிய ஆரம்பித்தது. நான் சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்வதற்கும் காரணம் நீயாகிவிட்டாய். உன் குரல் கேட்டால் என் நாளே மாறிவிடுகிறது. உன் நினைவுகள் என் இரவுகளையும் நிரப்புகிறது.

நீ அருகில் இல்லாத நேரங்களில் தான் உன் மதிப்பு இன்னும் அதிகமாக புரிகிறது. ஒவ்வொரு நொடியும் நீ இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன். உன்னோடு பேசும் அந்த சிறிய நேரங்களுக்காகவே நான் முழு நாளையும் காத்திருக்கிறேன்.

நம்முடைய கனவுகள், நம்முடைய எதிர்காலம், நம்முடைய சின்ன சின்ன சண்டைகள்—இதெல்லாம் என் மனசுக்குள் ஒரு அழகான உலகம் கட்டி இருக்கிறது. அந்த உலகத்தில் நீயும் நானும் மட்டும் தான். நான் தவறாக இருந்தாலும் என்னை புரிந்துகொள்ளும் ஒரே மனிதர் நீ தான். அதனால்தான் நான் உன்னிடம் இவ்வளவு சுலபமாக என்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டேன்.

ஒரு நாள் நம்முடைய இந்த காதல் ஒரு நினைவாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்க்கையாக மாறும் என்று நான் நம்புகிறேன். அந்த நாளை நான் காத்திருக்கிறேன்—உன்னுடன் கையை பிடித்து நடந்துகொண்டே போகும் அந்த நாளை.

அந்த பாதையில் நான் தடுமாறினால், என் கையை பிடித்து நடக்கச் சொல்லித் தரவா.

Sunday, May 3, 2026

அது வெறும் பயணம் அல்ல,அது என் இளமையின் ஓர் அத்தியாயம்;

காலை இன்னும் முழுதாக விழிக்காத நேரம்,
மந்தமான நீல வெளிச்சத்தில் தெருக்கள் நெளிகின்றன,
தூங்கிக்கிடக்கும் வீடுகளின் சுவாசம் போல
மெல்ல நிசப்தம் பரவிக்கிடக்கும் உலகம்.
அந்த அமைதிக்குள் நான்—
பையைக் கட்டி, கனவுகளைக் தோளில் சுமந்து,
மூன்று மணி நேரப் பயணத்தின் முதல் அடியை வைக்கும் போது
இதயம் ஏதோ புதிதாய் துடிக்கத் தொடங்கும்.
பஸ் ஜன்னலில் ஒட்டிக்கிடக்கும் மழைத்துளிகள்
நேற்றைய நினைவுகளைப் போல மெதுவாக வழியும்;
அவற்றின் வழியே பார்த்தால்
விடியலின் முதல் வர்ணங்கள் வானில் படரத் தொடங்கும்.
சூரியன் இன்னும் முழுதாய் வரவில்லை—
ஆனால் அவன் வருவான் என்ற நம்பிக்கை
ஒவ்வொரு முகத்திலும் சிறிய ஒளியாக தெரியும்.
பாதையின் ஓரம் நின்ற மரங்கள்
என் பயணத்தை எண்ணிக்கொண்டே இருக்கின்றன போல;
ஒவ்வொரு நாளும் அதே பாதை,
ஆனால் ஒவ்வொரு நாளும் வேறொரு உணர்வு.
சில நேரம் சத்தம்—
சில நேரம் முழு அமைதி—
அந்த இரண்டிற்கும் நடுவே தான்
என் இளமை ஓடிக்கொண்டிருக்கிறது.
மாலை திரும்பும் பாதை வேறுபட்டது,
சூரியன் சோர்ந்து வீடு திரும்பும் நேரம் அது;
வானம் ஆரஞ்சு நிறத்தில் எரிந்து கொண்டிருக்கும்,
நாளின் சுவடுகளை மெதுவாக அணைத்துக்கொண்டு.
மூன்று மணி நேரப் பயணம் மீண்டும்—
ஆனால் இப்போது மனதில் சுமை இல்லை,
பள்ளி சிரிப்புகள், நண்பர்கள் குரல்கள்,
அனைத்தும் காற்றில் கலந்து இசையாக மாறுகின்றன.
சில நேரம் சாளரத்துக்கு வெளியே பார்த்து
என்னவோ தேடிக்கொண்டே இருப்பேன்;
அந்த தேடல் என்ன என்று தெரியாது—
ஆனால் அது என் மனதின் அமைதிக்கான வழி.
பயணத்தின் சத்தத்தில் கூட
ஒரு தனி அமைதி இருக்கிறது;
அது வெளியில் இல்லை—
அது உள்ளுக்குள் உருவாகும் ஓசை.
அந்த நீண்ட பாதையில்
நான் மட்டும் அல்ல,
என் கனவுகளும் என்னோடு பயணம் செய்கின்றன.
காலை ஒவ்வொன்றும்
ஒரு புதிய தொடக்கம்,
மாலை ஒவ்வொன்றும்
ஒரு இனிய முடிவு.
அந்த மூன்று மணி நேரம்—
அது வெறும் பயணம் அல்ல,
அது என் இளமையின் ஓர் அத்தியாயம்;
விடியலை நோக்கி ஓடும் என் உள்ளத்தின் கதை.
நாளை மீண்டும் இதே பாதை,
இதே காற்று, இதே சாளரம்—
ஆனால் நான் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருப்பேன்;
அந்த பயணம் என்னை மெதுவாக உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

அடுத்த வாரம், பள்ளியில் ஒரு செய்தி பரவியது

பள்ளியின் பழைய கட்டிடத்தின் நடுவில் இருந்த அந்த நீண்ட வழித்தடம், ஒவ்வொரு காலைவும் ஒரு தனி உயிர் பெற்றது போல இருக்கும். அங்கேயே தினமும் முதலில் நடந்து செல்வார் சமூக அறிவியல் ஆசிரியர் அருண் சார். மாணவர்கள் எல்லாரும் அவரை அன்பாக “அருண் அண்ணா” என்று அழைப்பார்கள்.

அவரது கற்றல் முறை சாதாரணமில்லை. பாட புத்தகத்தை மட்டும் படிக்க சொல்லாமல், வாழ்க்கையைப் பற்றி பேசுவார். கவிதைகளை உணரச்செய்வார். பல மாணவர்களின் கனவுகளுக்கு அவர் ஒரு தீப்பொறி.

ஆனால் அந்த பள்ளியில் எல்லாரும் அவரைப் போல நினைக்கவில்லை.

புதிய நிர்வாகம் வந்த பிறகு, மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்ற ஒரு அழுத்தம் உருவானது. “பாடத்துக்கு வெளியே பேசாதீங்க”, “சிலபஸ் முடிச்சா போதும்” என்று மேலதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார்கள். அருண் சார் அதற்கு உடன்படவில்லை.

“மாணவர்கள் marks மட்டும் வாங்குற மெஷின் இல்ல. அவர்களுக்கு கனவுகள் இருக்கு,” என்று அவர் ஒருமுறை கூட்டத்தில் சொல்லியிருந்தார்.

அந்த ஒரு வார்த்தை அவருக்கு பிரச்சனைகளின் தொடக்கம் ஆனது.

மெல்லமெல்ல அவருக்கு unnecessary complaints வந்தது. classes observe பண்ணுறதுனு பெயர்ல அவரை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் விசாரணை செய்யப்பட்ட மாதிரி இருந்தது.

நான்கு மாத நூலக காத்திருப்புக்கு பின்பு
ஒரு நாள், Head Master அவரை அலுவலகத்திற்கு அழைத்தார்.

“நீங்க நல்ல ஆசிரியர் தான். ஆனா நம்ம system-க்கு adjust ஆகணும். இல்லனா…” என்று அர்த்தமுள்ள மௌனம்.

அருண் சார் சிரித்தார். அந்த சிரிப்பில் சோர்வும் இருந்தது, ஆனால் அடங்காத மனமும் இருந்தது.

அடுத்த வாரம், பள்ளியில் ஒரு செய்தி பரவியது—அருண் சார் மாறுதல் கேட்டிருக்கிறார்.

மாணவர்கள் அதைக் கேட்டு நம்பவில்லை. “சார், நீங்க போக மாட்டீங்க இல்லையா?” என்று கேட்டார்கள்.

அவர் நேராக பதில் சொல்லவில்லை. “நீங்க நல்லா படிங்க… அதுவே எனக்கு சந்தோஷம்,” என்றார்.

மாறுதல் நாளில், அந்த வழித்தடம் வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. மாணவர்கள் எல்லாம் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் அழுதார்கள்.

ஒரு சிறிய மாணவன் வந்து கேட்டான், “சார், நீங்க போய்ட்டு நம்மை மறந்துடுவீங்களா?”

அருண் சார் மெதுவாக அவன் தோளில் கை வைத்தார்.
“நான் உங்களை மறக்க மாட்டேன்… நீங்க உங்க கனவுகளை மறக்காதீங்க,” என்றார்.

அவர் நடந்து சென்றார். அந்த வழித்தடம் அவரின் அடிகளின் ஒலியை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டது போல.

அவரை அழுத்தம் கொடுத்து அனுப்பிய அந்த பள்ளி, இன்னொரு ஆசிரியரைப் பெற்றது. ஆனால் மாணவர்களின் மனதில் இருந்த அந்த “அருண் அண்ணா” என்ற இடம் மட்டும் யாராலும் நிரப்ப முடியவில்லை.

சில மனிதர்கள் ஒரு இடத்தை விட்டு சென்றாலும், அவர்கள் விதைத்த கனவுகள் அங்கேயே வளர்ந்து கொண்டே இருக்கும்.

Wednesday, September 4, 2024

ஆண்களில் உள்ள 'சிங்கம்' பெண்களை பயமுறுத்துவதில்லை

ஒரு பெண்ணின் ரகசியம்.
(அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய தகவல்)

ஒரு நாள், புதிதாகத் திருமணமான ஒரு இளைஞன் தன் மனைவியைக் கோவமாக திட்டி கத்திக் கொண்டிருந்தான், அவனுடைய தந்தை அவனை அழைத்து, 'நாம் போடும் கூச்சல் மற்றவர்களை பயமுறுத்தும். ஆனால் உன் மனைவியை அல்ல." என்றார்.

உங்கள் அச்சுறுத்தல்கள் அவளை பலப்படுத்துகின்றன. ஒரு பெண் அச்சுறுத்தப்பட்டால், அவள் அடக்கப்படுகிறாள் என்று பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள், ஆனால் பெண்கள் அச்சுறுத்தப்படும்போது வலிமையாக மாறுகிறார்கள்.

ஒரு ஆண் தன்னை அச்சுறுத்தி கத்தும்போது ஒரு பெண் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவள் உள்ளுக்குள் அமைதியாக இல்லை. அவள் ஆணின் பலவீனத்தை மதிப்பிடுகிறாள், அவனை எப்படி அடக்குவது, என்று மதிப்பிடுகிறாள்.

ஒரு பெண்ணின் இதயத்திற்குள் நுழையும் வழி, அவளை அச்சுறுத்தி அடிபணியச் செய்ய முயற்சிப்பதல்ல என்பது ஆண்களுக்குத் தெளிவாக புரிய வேண்டும்.

காதலும் அன்பும் மட்டுமே பெண்களை பலவீனமாக்குகிறது. நீங்கள் ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து அதைக் வெளிக் காட்டினால், அவள் உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லாமல் அன்புடன் இருப்பாள். ஆனால், ஒரு பெண் தான் உங்கள் பொம்மை போல் இருப்பதை உணர்ந்தால், நீங்கள் அவளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் அல்லது நீங்கள் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் அலல்து கட்டுப்படுத்துகிறீர்கள், என்றால் தன்மானம் அவளை ஆக்கிரமிக்கிறது. அவள் உடல் ரீதியாக உங்களுக்கு எதிராக நிற்காமல் இருக்கலாம், ஆனால் அவள் மன ரீதியாக உங்களுக்கு எதிராக போய்விடுவாள். ஒரு நாள், நீங்கள், அவளும், குழந்தைகளும் உங்களை அவர்களின் சொற்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதைப் பார்ப்பீர்கள் அல்லது அதை தாங்க முடியாமல் விரைவாக இறந்துவிடுவீர்கள்.

பல வருடங்களுக்கு முன் கணவன் அடித்துக் கொண்டிருந்த அந்த பெண்கள் இன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள். தாய்மார்களுக்கு குழந்தைகளின் அனுதாபம் இருக்கிறது, ஆண்கள் கடைசியில் தனிமையில் தவிக்கிறார்கள்.

ஆண்களுக்கு எதிராக எப்படி வாழ்வது என்பது பெண்களுக்குத் தெரியும்.

ஆண்களில் உள்ள 'சிங்கம்' பெண்களை பயமுறுத்துவதில்லை அல்லது அவர்களை உங்களுக்கு அடிபணியச் செய்யாது, அது ஒரு பெண்ணை வெல்வது காதல் மட்டுமே, கட்டாயப்படுத்துவதோ அல்லது அச்சுறுத்துவதோ அல்ல. சக ஆண்களை அடக்கலாம், ஆனால் உங்கள் மனைவியை அல்ல. பெண்களுக்கு இயற்கையாகவே வலிகளைத் தாங்குவது எப்படி என்று தெரியும்.

அவர்களுக்கு தைரியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தான் முட்டாள். ஆண்களிடம் இல்லாத தைரியம் அவர்களிடம் உள்ளது.

அச்சுறுத்தல்களை விட அன்பைக் காட்ட வேண்டும், உங்கள் மனைவியை நேசிக்கவும்!

உங்கள் மனைவியை நேசிப்பதற்கான இந்த சூத்திரம் அவளை வெல்ல உதவும். ஒரு பெண் நேசிக்கப்படும்போது, ​​அவளுடைய அனைத்து தைரியத்தையும் உடைத்து, அவள் உங்களை கைகளில் தாங்குகிறாள். ஒரு பெண் தன்னை நேர்மையாக காதலிக்கும் ஒரு ஆணுடன் வாழ, எதையும் செய்ய முடியும்.

உங்கள் மனைவியிடம் மென்மையாகப் பேசுங்கள், அவளிடம் கத்தாதீர்கள். கூச்சலிட்டு ஆணாக உங்கள் பலவீனத்தை ஆணவத்துடன் காட்டாதீர்கள்.

கூச்சலிட்ட ஆண்கள் எல்லாம், வாழ்க்கையின் இறுதியில் பேச ஆளில்லாமல் கூடத்தில் மூலையில் கிடத்தப்பட்டு இறுதியில் இறந்து போனவர்கள்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..