Tuesday, July 8, 2014

’டேய்.... தம்பி..... எழுந்து வாடா......... நாம விளையாடலாம்’

    
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது, அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் "உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான், நீயும்அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க" என்று சொல்லியே வளர்த்தார்கள்.
  
அனிதா, அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே "டேய் தம்பி! சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம். நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன்." என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.
    அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதைபார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது. நாட்கள் உருண்டோடின பிரசவவலி எடுக்கவே மருத்துவமனையில்சேர்த்தார்கள். பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.
    மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள். அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார். ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.
    "உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான். உன்னை மருத்துவமனையில்பார்க்க அனுமதிக்கமாட்டா ங்கம்மா" என்று அவள் அப்பா சொன்னார். அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே, சரி! "நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன்" என்றார்.
    மறுநாள் மருத்துவமனையில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் "குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம்" என்று கூறினார்.
    பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.
    அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள், அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய்.... தம்பி..... எழுந்து வாடா......... நாம விளையாடலாம்’ என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.
    நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...

No comments: