Friday, March 30, 2012

என் கிராமத்து நினைவுகளை நெஞ்சில் முள் குத்துகிறது

பல் விளக்கும் பட்டை வேப்பகுச்சி நீச்சலடிக்கும் ஏரி குட்டை பிடிக்க போகும் பட்டாம்பூச்சி காதில் கேட்ட கிராமத்து பாடல்கள் காணமல் போன குழாய் ரேடியோ கண்களில் நிற்கும் கறவை மாடு விட்டு வந்த வீட்டு வாசல் பார்க்க துடிக்கும் பம்பர விளையாட்டு கூட்டமாய் விளையாடிய கில்லிதாண்டு விரட்டி பிடித்த கோழி மாடு விழுந்து எழுந்த தொழி வயல் நினைவில் நிற்கும் நிலா சோறு அடித்து விட்ட அடுத்தவீட்டு பயன் அடி வாங்கின அப்பு மகள் முத்தமிட்ட ஆட்டுக்குட்டி முட்டிவிட்ட மாட்டு கன்று பட்டம் விட்ட பள்ளி புத்தகம் பாழாய் போன தண்ணீர் குழாய் சண்டை போட்ட சித்தப்பா வீடு உதவி செஞ்ச பக்கத்துக்கு வீடு உண்ணாமல் இருந்த அக்கா கைகாட்டி காரில் போன கார வீட்டுகாரர் நித்தமும் சப்தமிடும் ஒரே ஒரு அரசு பேருந்து ஏரியில் இறந்து போன எதிர் வீட்டு பயன் களை எடுக்றப்ப கதை சொல்லி களைப்பு போக்கும் களவாணி பாட்டி வெற்றிலை துப்பும் கொட்டகை தாத்தாங்க காலைல கிளம்பிடும் காளை மாடுகளோடு காணும் அய்யா மாறுங்க மதிய உச்சி வெயிலில் வேலை செய்யும் அம்மா மாருங்க ரெட்டை சடை சின்ன பொண்ணுங்க தத்துவம் பேசும் காதல் கிறுக்கங்க மருத்துவம் கொடுக்ற பாட்டி எப்போதும் நான் முதல் மார்க் வாங்கிய பள்ளி எத்துனை எத்துனை சொல்வது மறக்கமுடியா என் கிராமத்து நினைவுகளை நெஞ்சில் முள் குத்துகிறது

No comments: