Tuesday, December 6, 2011

ஏமாற்றி விடாதீர்கள். ஜமாயுங்கள் …


கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படை யிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்…அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப் பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது….

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸீஸஸ் வரும் வாய்ப்புகள் அதிகம்…. அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்ப தியருக்குக் கட்டாயம் வரும்….. என்பது போன்ற சிலரது தவறான வழி காட்டு தலையெல்லாம் குப்பையில் வீசி எறியுங்கள்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும்.

அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும்போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். இதை எப்படி களைவது?

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடாமல் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிடுங்கள். கையால் தான் ஊட்டிவிட வேண்டுமென்பதில்லை… வாயால் கூட…

புதுமணத் தம்பதிகளைப் பொருத்தவரை, வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இரும்பும் காந்தமும் ஒட்டிக்கொள்வதுபோல் முதலிரவில் கணவனும் மனைவியும் ஒட்டிக்கொள்வது இயற்கையிலும் இயற்கையே…

சாதாரண பேச்சில் ஆரம்பித்து, ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டு, நகைச் சுவையைக்கலந்து, சிறிது சிறிதாக பேச்சினூடே பட்டு ம்படாத ஸெக்ஸான வார்த்தைகளை கலந்து, போகப்போக அந்த பேச்சின் முடிவு காமக்கிளர்ச்சி யில் கொண்டு விடுமானால் முதலிரவு தேனான இரவாக இனிக்கும். எக்கரணத்தைக் கொண்டும் முதலிரவில் தனது இல்லற பார்ட்னரின் மனதைப் புண்படுத்தும் எந்த பேச்சும் செய்கையும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

உடலுறவை முதலிரவில் வைத்துக் கொள்ளாமல் சில நாட்களுக்குப் பிறகு நன்கு பழகியபின் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்லக்கூடிய கருத்துக்களெல்லாம் காலாவதியாகிவிட்ட ஒன்று.

எங்கு திரும்பினாலும் காமம் கொட்டிக்கிடக்கும் இந்த நூற்றாண்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை. எழுதுவதோ சொல்வதோ எளிது. ஆணும் பெண்ணும் ஒரு அடி இடைவெளிக்குள் நெருங்கிவிட்டாலே இருவரும் உடலால் ஒன்று சேர்வதை தவி ர்க்க முடியாது என்று இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறும்பொழுது உடலுறவை தாமதப்படுத்தும் கருத்துக்களெல்லாம் சும்மா கப்ஸா என்றே தோன்றுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிந்தனையில், இந்த முதலிரவில் எப்படியெப்படியெல்லாம் செய்யலாம், எத்தனை முறை செய்யலாம் என்கின்ற கணக்குத்தான் ஓடிக்கொண்டிருக்குமே தவிர….மாற்று சிந்தனையல்ல. எனவே ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, முதலிரவில் உங்கள் இல்லற பார்ட்னரை காக்க வைத்து ஏமாற்றி விடாதீர்கள். ஜமாயுங்கள் … ஏனெனில் நீங்கள் இருவரும் ஓருடல் என்பதை நிரூபிக்கும் இரவல்லவா இந்த முத லிரவு!

முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து


இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.
அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான். சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலையவிடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு சுய இன்பத்தினால் விந்து வீணாவது பற்றிய தவறான எண்ணங்களும் தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண் ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.