Friday, April 15, 2011

பெரியாரையும் பாரதிதாசனையும் படித்துப் பாருங்கள்...


பல நூறு மார்கத்திலும்
மதத்திலும் போற்றப்படும்
இவ்வண்ட சராசரத்து
சக்தியுள்ள பெருந் தெய்வங்களே...
அகிலமாளும் ஆண்டவர்களே...
உங்களாலேயே படைக்கப்பட்ட
பெரியாரையும் பாரதிதாசனையும்
படித்துப் பாருங்கள்.
நீங்கள் எதை மறந்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
நினைவு படுத்துவார்கள்.
நீங்கள் எதை மறுத்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
எடுத்தியம்புவார்கள்.

குறைந்த பட்ச கோரிக்கையாக
நீங்கள் கொடுக்க மறந்த -
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பேதமற்ற சம உரிமை
கொடுத்தருள்வீராக.
ஏனெனில்
நீங்கள் படைத்த காலந்தொட்டு,
வாழ்வெனும் சக்கரம்
இவ்விரு சக்திகளால்தான்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

Sunday, April 3, 2011

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

நாலு மணிக்கு எந்திரிச்சு,
பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கணும். அஞ்சு மணி
ஆ‌கி‌விடும்.

அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்‌பினா காபியோ டீயோ
போட்டுத் தருவாங்க. குடி‌ங்க.

இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ்
பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம்.
நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

எ‌ன்ன ஐடியா எ‌ப்படி?

---------------------------------------- ---------------------------------------- -----

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா...
எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா
எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன்
போடு‌ம்.

-------------------------------- ---------------------------------------- -------------

கடை‌க்கார‌ர்: ம‌ளிக‌ை கடை‌யில வேலை பா‌ர்‌‌த்தவனை
மரு‌‌ந்து கடை‌யில வேலை‌க்கு வை‌த்தது ரொ‌ம்ப த‌ப்பா போ‌‌ச்சு.
ம‌ற்றவ‌ர்: ஏ‌ன்
அ‌ப்படி சொ‌‌ல்‌‌றீ‌ங்க.
கடை‌க்கார‌ர்: எதை எடு‌க்க‌ச் சொ‌ன்னாலு‌ம் எ‌த்தனை
‌கிலோ வே‌ணு‌ம்னு
கே‌ட்‌‌கிறா‌‌ன்.

------------------------ ---------------------------------------- ---------------------

"என்ன சார் இது இன்டர்வியூவுக்கு வந்தா எல்லாருக்கும்
கண்ணுல சொட்டு மருந்து ஊத்தறாங்க?"
"ஹலோ! இது இன்டர்வியூ இல்ல! வரிசையா எல்லாம்
உட்கார்ந்திருந்தா அது கம்பெனி இன்டர்வியூவா? இது கண்
ஆஸ்பத்திரி!"

---------------------------------------- ---------------------------------------- -----

"அந்த
டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"
"எப்படி
சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன்
`சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம்
நிறைஞ்சதா இருக்கு பாரு."

சேவை செய்து பாருங்கள்


பிராத்தனை செய்யுங்கள் கடவுளுக்கு அருகில் செல்லலாம்.... ஆனால், சேவை செய்து பாருங்கள் கடவுளே உங்கள் அருகில் வருவார்...

ஊமையாகி விடுங்கள்


உள்ளம் கொதித்தால் உறவோடு சண்டையிடாதீர்கள் உண்மைகள் வெளிச்சமிடும் ஊரறிய நாறிவிடும் ஊமையாகி விடுங்கள் மௌனமே சிறந்த மருந்து.............!!!

ஒரு நூலகம் திறக்கப்பட்டால்


ஒரு கோயில் திறக்கப்பட்டால்
இந்து மதம் வளரும்.

ஒரு பள்ளிவாசல் திறக்கப்பட்டால் இஸ்லாம் மதம் வளரும்.

ஒரு தேவலாயம் திறக்கப்பட்டால் கிறிஸ்துவ மதம் வளரும்.


ஒரு நூலகம் திறக்கப்பட்டால் மனித நேயம் வளரும் .

இவைதான் பயத்தின் பாடசாலை.......!


பயம் கொண்டவனுக்கு வெளிச்சம் கூட இருட்டுதான் !

பதற்றம் அவனைப் பதுக்கி வைக்கும் !

தயக்கம் அவனை தேக்கி வைக்கும் !

சோர்வு அவனை முடக்கி வைக்கும் !

இயலாமை அவனை இறப்பில் தள்ளும் !

இவைதான் பயத்தின் பாடசாலை.......!


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!


ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.


இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கபட வேண்டியுள்ளது.


ஏனென்றால்,

1.குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

2.ஓட்டுக்கு பணம் கிடையாது.

3.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

4.கரண்ட் கட் கிடையாது.

5.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலக வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)


ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள் நினைவிற்கு..


1.குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

2.ஓட்டுக்கு பணம் கிடையாது.

3.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

4.கரண்ட் கட் கிடையாது.

5.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ, பங்கோ கிடையாது


- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைதரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல்தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??


அடுத்த 5 ஆண்டுகளில் --------------குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல. மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும். இது அநியாய, அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும். இதில் நாம் தவறிழைத்தாலோ, அடிபணிந்தாலோ, ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகிவிடுவோம். உலகம் நம்மை காரி உமிழும்.

நல்ல வரலாறு படைப்போம். நன்றி!

மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?


ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.

ஏம்மா அஞ்சு! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?
நீங்கதானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லிக்கிட்டேயிருந்தீங்க...

ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சிருப்பாங்க,
அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் forward தான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால்,
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்,
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

நீ பஸ்ல ஏறினாலூம் பஸ் உன்மேல ஏறினாலும் டிக்கெட் நீ தான் எடுக்கணும்.
என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டை தான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

என்ன தான் பெரிய வீரனாக இருந்தாலும்,
வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீலை முந்த முடியாது. இதுதான் உலகம்

ஓடுற எலி வாலைப் புடிச்சால் நீ 'கிங்'கு
ஆனால்,தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

வேர்க் கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

ஓட்டப் பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்,
கைக்குத் தான் ப்ரைஸ் கிடைக்கும்.


என்னதான் நெருப்புக் கோழியாக இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.